யோகாசனம் மற்றும் பிராணயாமா செய்தல்,நினைவாற்றலை அதிகரிப்பதற்கும், படிக்கும் போது நம்மை அமைதியாக வைத்திருப்பதற்கும் உதவும். தினசரி பணிகளைச் செய்வதில் நமது மூளை ஒரு தனித்துவமான பாத்திரத்தை வகிக்கிறது. பதிலளிக்க, புரிந்துகொள்ள, உணர மற்றும் செயல்பட நமது திறன் நம் மூளையின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. உடலில் உள்ள மற்ற உறுப்புகளைப் போலவே, மூளைக்கும் ஒவ்வொரு நாளும் ஊட்டச்சத்து மற்றும் ஆற்றல் தேவை என்பதை நம்மில் பெரும்பாலோர் உணரவில்லை. உடற்பயிற்சி செய்வது உடலை நல்ல நிலையில் வைத்திருப்பது போலவே, நம் மூளையின் ஆரோக்கியத்துக்கு,யோகாசனங்கள். குறிப்பாக, மனித உடலின் சிறந்த செயல்பாட்டிற்கு உதவுகின்றன. பத்மாசனா(Padmasana) வீரசனா(Veerasana) சூர்யநஸ்காரம் மாஸ்கர்(Surya Namaskar) பிரமாரி பிராணயம்(Bhramari Pranayama) வஜ்ராசனா(Vajrasana) பாஷ்டிமோட்டனாசனா(Paschtimottanasana) சிர்சசனா(Sirsasana) ஹாலசனா(Halasana) நாடி ஷோதன பிரணயமா(Nadi Shodhana Pranayam) சர்வங்கசனா(Sarvangasana) ஹக்கினி முத்ரா(Hakini mudra)
குழந்தைங்க நம்மல பார்த்ததும் விளையாட ஓடி வரதாகட்டும்.. வீட்ல உள்ளவங்க, ஃப்ரெண்ட்ஸ் நமக்கு பிடிச்ச சின்ன சின்ன விஷயத்த பார்த்து செய்யரதாகட்டும்.. நம்ம செய்ததற்காக கிடைக்கும் குட்டி குட்டி பாராட்டுக்கள்.. நம்ம செய்து முடிக்கனும்ன்னு நினைத்தத சரியான நேரத்தில முடிக்கறது..அப்போ வர ஒரு திருப்தி.. இதெல்லாம் நம்ம day to day லைஃப் ல நம்ம கூட டிராவல் பண்ற விஷயங்கள்..இது தான் ஒரு நாள் முடியும்போது ஒரு வித சந்தோஷம் கொடுக்கும்..அந்த நாளை முழுமையானதாக்கும்.. இப்படி எதுமே ஒரு நாள்ல நடக்கமா போனா.. "ச்ச என்ன.. இன்னைக்கு நாள் நல்லாவே போகல", ன்னு தோணும் கண்டிப்பா.. சின்ன சின்ன விஷயம் எல்லாம் ஒன்னு சேர்ந்து தான் பெரிய பெரிய நிறைவு மற்றும் மகிழ்ச்சியை கொடுக்குது.. அதனால நமக்கு கிடைக்கற சின்ன சின்ன விஷயத்தையும் நல்லா ரசிச்சு வாழ்வோம்..😊🌸
கருத்துகள்
கருத்துரையிடுக